Friday, October 28, 2011

இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு


அழைப்பு பணியை தன முழு முதற் பணியாக கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய தாஃவா பணிகளை அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக செய்து கொண்டுள்ளது.இதன் பயனாக கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 21/10/2011 வெள்ளிக்கிழமை ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் நடந்த ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடனமான திருக்கலிமாவை மொழிந்தனர்.இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கை விளக்கத்தை அவர்களுக்கு தலைவர் எஸ்.எம்.பாக்கரும், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.சையத் இக்பாலும் சொல்லிக்கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment